search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காவலர் தேர்வில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
    X

    திண்டுக்கல்லில் உள்ள தேர்வு மையத்தில் காவலர் தேர்வு எழுத ஆர்வத்துடன் வந்த பெண்கள்.

    தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று காவலர் தேர்வில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

    • தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற்றது.
    • திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், சிறைத்துறை காவலர், தீயணைப்புத்துறை காவலர் தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தேர்வு 6 மையங்களில் நடைபெற்றது. இதில் ஆண்கள் 9741 பேர், பெண்கள் 2072 பேர் மற்றும் ஒரு திருநங்கை என மொத்தம் 11814 பேர் தேர்வு எழுத அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ, பார்வதீஸ், ஜி.டி.என், என்.பி.ஆர், எஸ்.எஸ்.எம் கல்லூரிகளிலும், அவர்லேடி பள்ளியிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கு நுழைவு சீட்டு பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அவர்களது புகைப்படம் ஒட்டிய நுழைவுசீட்டுடன் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்குள் உரிய நேரத்தில் அடையாள அட்டையுடன் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.

    கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை எழுதுபொருள் மற்றும் நுழைவுச்சீட்டு, எழுதுஅட்டை இவைகளை தவிர வேறு எந்த பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது என அறிவுறுத்தப்பட்டது.

    தேர்தல் பார்வையாளர், தொழில்நுட்ப காவல்துறை தலைவர் பாபு மற்றும் மாவட்ட எஸ்.பி பாஸ்கரன் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெற்றது. தேர்வு மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

    நுழைவு சீட்டு மற்றும் பேனா மட்டுமே அனுமதிக்கப்பட்டது. டிஜிட்டல் வாட்ச், கால்குலேட்டர் உள்பட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை. முககவசத்திற்கும் தடை விதிக்கப்பட்டதால் தேர்வு மையத்திற்கு வந்த தேர்வர்கள் முககவசத்தை அகற்றும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் தேர்வு மையத்திற்கு செல்லும் முன்பு முககவசத்தை அகற்றி சென்றனர்.

    தேனி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 9432 ஆண்கள், 1300 பெண்கள், ஒரு திருநங்கை உள்பட 10,733 பேருக்கு ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டது. மேலும் தேர்வு எழுத வருபவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×