search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரம் அருகே துணை மின் நிலையத்தில் பிடிபட்ட நல்லபாம்பு
    X

    தீயணைப்புத்துறையினரால் மீட்கப்பட்ட நல்லபாம்பு.


    ஒட்டன்சத்திரம் அருகே துணை மின் நிலையத்தில் பிடிபட்ட நல்லபாம்பு

    • ஒட்டன்சத்திரம் அருகே துணை மின் நிலையத்தில் பிடிபட்ட நல்லபாம்பை வனத்துறையினர் மீட்டனர்
    • மின் நிலையத்தில் சிக்கிய நல்லபாம்பு

    ஒட்டன்சத்திரம் :

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மஞ்சநாயக்கன்பட்டி பிரிவு மாட்டுப்பாதையில் அமைந்திருக்கும் துணை மின் நிலையத்தில் பாம்பு புகுந்து விட்டதாக துணைமின் நிலைய அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துணை மின் நிலையத்தில் உள்ள மோட்டார் அறைக்குள் இருந்த சுமார் 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பை உயிருடன் மீட்டனர்.

    பின்னர் மீட்கப்பட்ட பாம்பு ஒட்டன்சத்திரம் வனத்துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பத்திரமாக விட்டனர். மேலும் துணை மின் நிலையத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இடையே சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


    Next Story
    ×