என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப தகராறில் விஷம் கொடுக்கப்பட்ட  2 குழந்தைகள் சாவு
    X

    குடும்ப தகராறில் விஷம் கொடுக்கப்பட்ட 2 குழந்தைகள் சாவு

    • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • 2 குழந்தைகளுக்கும் விஷம் ெகாடுத்து விட்டு தானும் குடித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிாி மாவட்டம் கந்திகுப்பம் அருகே உள்ள கெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ்.பேக்கரி மாஸ்டர். இவரு டைய மனைவி கவுரி (வயது 24).

    இவர்களுக்கு ஜீவன் (4) என்ற மகனும், பாவனாஸ்ரீ (2) என்ற மகளும் இருந்தனர். இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு கவுரி செந்தாரப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.

    பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவர் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். அவர்கள் மகளை சமாதானம் செய்தனர். இதனிடையே நேற்று முன்தினம் கவுரி 2 குழந்தைகளுக்கும் விஷம் ெகாடுத்து விட்டு தானும் குடித்தார்.

    சிறிது நேரத்தில் அவர்கள் 3 பேரும் மயங்கி விழுந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக அவர்கள் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தைகள் ஜீவன், பாவனாஸ்ரீ ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.கவுரிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×