search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பி.எம்.கிசான் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்
    X

    கோப்பு படம்

    பி.எம்.கிசான் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தல்

    • பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
    • கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாட்டில் "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டிற்கு ரூ.6,000-ம், 3 தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக மத்திய அரசினால் வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டில் 13-வது தவணையாக, அதாவது 2022 டிசம்பர் முதல் மார்ச் முடிய உள்ள காலத்தினை தவணைத் தொகை பி.எம்.கிசான் இணையதளத்தில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்த பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.

    பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தங்களாகவே ஆதார் எண்ணை கீழ்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

    பொது சேவை மையத்திற்கு சென்று தனது பெயரை பி.எம்.கிசான் இணைய தளத்தில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒரு முறை கடவுச்சொல்லை பி.எம்.கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம் அல்லது பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை வைத்து பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    உங்களது கைபேசியில் உள்ள இணையதள வசதியை பயன்படுத்தி இணையதளத்தில் சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    எனவே, பி.எம்.கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால், மேற்காணும் முறைகளில் பி.எம்.கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திட வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் அனுசியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×