search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு நசியனூரில் பிளஸ்-1 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
    X

    ஈரோடு நசியனூரில் பிளஸ்-1 மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஸ்ரீநிதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் நசியனூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஸ்ரீநிதி (16), மிருதுளா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். ஸ்ரீநிதி அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி ஸ்ரீநிதி தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அப்போது முருகன் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோரை பார்க்க சென்று விட்டார். அவரது மனைவி மாவு அரைக்க கடைக்கு சென்று விட்டார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி ஸ்ரீநிதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு பெண் மாணவி ஸ்ரீநிதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.

    அவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து ஸ்ரீநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சித்தோடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×