search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடக்கம்
    X

    பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10-ந்தேதி தொடக்கம்

    • தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதி யும் தொடங்குகிறது.
    • இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    சேலம்:

    தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வருகிற 13-ந்ேததியும், பிளஸ்-1 பொதுத் தேர்வுகள் வருகிற 14-ந்தேதி யும் தொடங்குகிறது.

    மாநிலம் முழுவதும் சுமார் 15 லட்சம் மாண வர்கள் எழுதும் இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசு தேர்வுகள் இயக்ககம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்க ளுக்கான செய்முறை தேர்வு கள் கடந்த 1-ந்தேதி நேற்று முன்தினம் (7-ந்தேதி) முடிவடைந்தது.

    சேலம்

    சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 325 அரசு பள்ளிகள், மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளை சேர்ந்த 16,706 மாணவர்கள், 19,436 மாணவிகள் என மொத்தம் 36,142 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதுகின்றனர்.

    இதேபோல் 18,830 மாண வர்கள் 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் பிளஸ்-2 தேர்வு எழுது கின்றனர். இதுதவிர தனித்தேர்வர்களும் தேர்வு எழுத உள்ளனர்.

    விடைத்தாள்

    பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம் அடுத்த மாதம் 10-ந்தேதி தொடங்க உள்ளது. முதல் நாளில் தலைமை விடை திருத்துனர் மட்டும் திருத்த பணிகளை மேற்கொள்வார். அதன் பிறகு 11-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை உதவி விடை திருத்துனர்கள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வர். இந்த பணிகள் ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் முடிவடைகிறது.

    Next Story
    ×