search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் விழா
    X

    வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் விழா

    • சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நடவடிக்கையாக வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
    • கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் திறன் மேம்பாடு தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மக்கள் கல்வி நிறுவனத்தின் சார்பில் காலநிலை மாற்றத்தால் மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் நடவடிக்கையாக வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமப்புறங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

    கீழ் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் தலைவர் சார்லஸ் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன் தொடங்கி வைத்தார்.

    மேலும் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சவுதா நளினா தலைமையில் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் உள்ள மக்கள் கல்வி நிறுவன பயனாளர்களுக்கும், கிராம மக்களுக்கும் மரக்கன்றுகளை வழங்கும் பணியை மக்கள் கல்வி நிறுவனத்தின் களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×