என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடத்த திட்டம்
- கோடை சீசனையொட்டி வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
- 31-ந் தேதி தாவரவியல் பூங்காவிவ் நிறைவு விழா நடைபெற உள்ளது
ஊட்டி:
கோடை சீசனையொட்டி வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
இதன்படி இந்த மாதம் 6 மற்றும் 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கோடை விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந் தேதி முதல் 31-ந் தேதி தேதி வரை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ந் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாக்கத்தான், 11-ந் தேதி படகு போட்டி, 12,13,14-ந் தேதி கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி, 13,14,15-ந் தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அசெம்பிளி தியேட்டரில் திரைப்பட விழா, 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, 21 22-ந் தேதிகளில் குன்னூரில் தேயிலை சுற்றுலா, 25 முதல் 31-ந்தேதி வரை மகளிர் சுய உதவிக் குழு சார்பில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கோடை விழா, 27 28-ந் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி, 31-ந் தேதி தாவரவியல் பூங்காவிவ் நிறைவு விழா நடைபெற உள்ளது
இதில் சிறப்பம்சமாக 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது.






