என் மலர்
உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்- மின்வாரியம் அறிவிப்பு
- ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
- ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
நாகர்கோவில்:
செண்பகராமன்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
தக்கலை உபமின்நிலையத்துக்கு உட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், புலியூர் குறிச்சி, குமாரகோவில், வில்லுக்குறி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிக்கோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை, மருந்துக்கோட்டை ஆகிய இடங்களிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், காற்றாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செண்பகராமன்புதூர், தக்கலை, பழவூர் காற்றாலை பண்ணை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.






