search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ் நிலையத்தில் குடிமகன்களை குறிவைக்கும் பிக்பாக்கெட் திருடர்கள்
    X

    போதை ஆசாமியிடம் பணம் திருடும் பிக்பாக்கெட் வாலிபர்

    பஸ் நிலையத்தில் குடிமகன்களை குறிவைக்கும் பிக்பாக்கெட் திருடர்கள்

    • திண்டுக்கல் பஸ் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் இரவில் போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தாலும் பயணிகள்பஸ் நிலையத்திலேயே அயர்ந்து உறங்க கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது.
    • குடிபோதையில் கீழே கிடக்கும் ஆசாமிகளை குறிவைத்து அவர்களின் உறவினர்கள் போலவே அருகே அமர்ந்து அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணம், நகை மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி, சென்னை, கோவை, மதுரை, தேனி, கம்பம், குமுளி உள்ளிட்ட தென் தமிழகத்துக்கும் பல்வேறு மாவட்டங்களுக்கு இரவு பகலாக பஸ் இயங்கி வருகின்றது.

    திண்டுக்கல் பஸ் நிலையத்தில் போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தாலும் இரவில் போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தாலும் பயணிகள்பஸ் நிலையத்திலேயே அயர்ந்து உறங்க கூடிய ஒரு சூழ்நிலை உள்ளது.

    மேலும் பயணம் செய்யக்கூடிய பயணி மது அருந்தி வந்த சூழ்நிலையில் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் அயர்ந்து மதுபோதையில் உறங்கும் பொழுது மது போதையில் தூங்குபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றது.

    குடிபோதையில் கீழே கிடக்கும் ஆசாமிகளை குறிவைத்து அவர்களின் உறவினர்கள் போலவே அருகே அமர்ந்து அவர்கள் வைத்திருக்கக்கூடிய பணம், நகை மற்றும் உடைமைகளை கொள்ளையடித்து செல்கின்றனர்.

    இதனால் மது அருந்துபவர்கள் மட்டுமன்றி பஸ்கள் கிடைக்காமல் காத்திருக்கும் பயணிகளின் உடமைகளும், தொடர்ந்து பறிபோய் வருகிறது.

    இரவு கரூர் பஸ் நிலையம் அருகே மது போதையில் படுத்து இருப்பவரிடம் பணத்தை கொள்ளையடிக்கும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×