என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடன் தொல்லையால் போட்டோஸ்டுடியோ உரிமையாளர் தற்கொலை
- தொழில் காரணமாக கடன் வாங்கி உள்ளார்.
- கடன் தொல்லை யால் மன உளைச்சல் அடைந்த ரவிச்சந்திரன் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 65) ,இவர் கிருஷ்ணகிரியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். தொழில் காரணமாக கடன் வாங்கி உள்ளார்.
இந்த கடன் தொல்லை யால் மன உளைச்சல் அடைந்த ரவிச்சந்திரன் கடந்த 25-ந் தேதி விஷம் குடித்துள்ளார். இதனை அறிந்த அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






