என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு 11 மாதமாக சம்பளம் வழங்கவில்லை நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு
- மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 11 மாதமாக சம்பளம் வழங்க வில்லை.
- உரிய நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியா ளர்களான எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, நடுநிலைப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் 11 மாதமாக சம்பளம் வழங்க வில்லை எனக் கூறி கலெக்டரிடம் நேற்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பாக புது வாழ்வு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் இருக்கும் கழிவறைகளை தினமும் தூய்மை பணி செய்ய கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் மாவட்டம் முழுவதும் இருக்கும் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்தனர்.
அதன்பின் இப்பணியை சிறப்பாக செய்து வருகிறோம். ஆனால் மாதம், மாதம் எங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை. கொரோனா காலத்தில் இரண்டு வருட சம்பளம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது கடந்த 11 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அதனால் தூய்மை பணி செய்யும் எங்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
அதனால் தாங்கள் இதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியா ளர்களான எங்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்