என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடு கட்ட நிலம் வழங்க கோரி மனு
    X

    மனு அளிக்க வந்த பெண்களை படத்தில் காணலாம்.

    வீடு கட்ட நிலம் வழங்க கோரி மனு

    • கிராம மக்கள் வீடு கட்டுவதற்கு நிலங்கள் வழங்க கோரி கோரிக்கை மனு அளித்தனர்.
    • ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம்.

    கிருஷ்ணகிரி,

    தேன்கனிக்கோட்டை அடுத்த குந்துமாரனப்பள்ளி ஊராட்சி போத்தசந்திரத்தை சேர்ந்த கிராம மக்கள் வீடு கட்டுவதற்கு நிலங்கள் வழங்க கோரி கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    போத்தசந்திரம் கிராமத்தில், ஆதி தமிழர் சமுதாயத்தை சேர்ந்த, 40 குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கென்று நிலங்கள் இல்லை. ஒரே வீட்டில் மூன்று, நான்கு குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். போதுமான வசதிகளும் இல்லை. எங்கள் பகுதியில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன. அவற்றில் நாங்கள் வீடு கட்ட ஏதுவாக நிலங்களை வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×