search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
    X

    மனு கொடுக்க வந்த புத்தூர் கீழத்தோப்பு பொதுமக்கள்.

    வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

    • புத்தூர் கீழத்தோப்பில் 13 குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம்.
    • உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது.

    கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அம்மாபேட்டை புத்தூர் கீழதோப்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    அம்மாபேட்டை பேரூரா ட்சிக்கு உட்பட்ட புத்தூர் கீழத்தோப்பில் 13 குடும்பங்கள் பல தலைமுறைகளாக குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம்.

    எங்களுக்கு வீட்டு வரி ரசீது, வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே உடனடியாக எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×