search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியகுளத்தில் ரேசன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை
    X

    கோப்பு படம்

    பெரியகுளத்தில் ரேசன் கடை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

    • ரேசன் பூட்டைஉடைத்து ஜீனி மற்றும் துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன்கடையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை தேடி வருகினறனர்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் நேருநகர் பகுதியில் ரேசன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டியை சேர்ந்த அழகர்(43) என்பவர் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல் பொருட்களை சரிபார்த்துவிட்டு கடையை பூட்டிச்சென்றார்.

    2 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடைக்கு வந்தபோது பூட்டைஉடைத்து பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது. அப்பகுதியில் 3 மர்மநபர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். அழகர் சத்தம்போட்டதால் அவர்கள் பொருட்களை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து பொருட்கள் சரிபார்த்தபோது 100 கிலோ ஜீனிமூடை 2-ம், 250 கிலோ துவரம்பருப்பு, பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன்கடையில் பொருட்கள் திருடிய மர்மநபர்களை தேடி வருகினறனர்.

    Next Story
    ×