search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீர தீர செயல்கள் புரிந்த இளைஞர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்
    X

    வீர தீர செயல்கள் புரிந்த இளைஞர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

    • வீர தீர செயல்கள் புரிந்த இளைஞர்கள் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வீர தீர செயல்கள் புரிந்த இளைஞர்களிடம் இருந்து 2022-ம் ஆண்டிற்கான சர்வோட்டம் ஜீவன் ரக்சா பதக், உத்தம் ஜீவன் ரக்சா பதக், ஜீவன் ரக்சா பதக் விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்டத்தில் நீரில் மூழ்கியவர்களை மீட்டவர்கள், தீ விபத்து, மின் கசிவு விபத்துகள், மண் சரிவு, விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்க விபத்துகள் போன்ற மீட்பு பணிகளில் உயிர்களை காப்பாற்றிய சாதனையாளர்களிடம் இருந்து வருகிற 1-ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருதிற்கான விண்ணப்ப விவரங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை 7502034646, 8838872443 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×