search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் பலி
    X

    தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் பலி

    • தடுப்பு சுவரில் கார் மோதியதில் பெண் பலியானார்.
    • படுகாயம் அடைந்த 5 பேருக்கு தீவிர சிகிச்சை

    பெரம்பலூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 55). இவரது மனைவி பானுமதி (45). இவருடைய மகன் சேமன் (24). இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் ரகுபதி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களான துரைசாமி (60), சுலோச்சனா (54), ஜனனி (24) ஆகியோருடன் காரில் பழனி சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தனர். காரை ரகுபதி ஓட்டி சென்றார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையின் நடுேவ இருந்த தடுப்பு சுவரில் மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இதில், படுகாயம் அடைந்த பானுமதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×