என் மலர்
உள்ளூர் செய்திகள்

திறன் மேம்பாட்டு பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்துறை அதிகாரிகள் அழைப்பு
- திறன் மேம்பாட்டு பயிற்சி பெற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்
- தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் தொழிலா–ளர் நலத்துறை மூலம் நடை–பெறவுள்ள திறன்மேம் பாட்டு பயிற்சி பெற கட்டு மான தொழிலாளர்க–ளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (சமுக பாதுகாப்பு திட்டம்) பாஸ்க–ரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:-தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரி–யத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்க–ளுக்கு 3 மாதம் மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இத்திறன் மேம்பாட்டு பயிற்சியில் பதிவு செய்து 3 ஆண்டுகள் பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்க–லாம்.
தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் 18 வயதிற்கு மேற்பட்ட–வர்களாகவும், 40 வயதிற்கு உட்பட்ட–வராக–வும் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமி–டம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவ–ருக்கும் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.
கட்டுமானத் தொழிலாளர் கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களான கொத் த–னார்,பற்ற வைப்ப–வர், மின்சாரப் பயிற்சி, குழாய் பொருத்துநர், மர–வேலை, கம்பி வளைப்ப–வர், கார் பெண்டர் மற்றும் சாரம் கட்டுபவர் ஆகிய தொழி–லாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். 3 மாத பயிற்சியானது முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், அடுத்த 2 மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவளுரில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெ–றும். மேலும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்க தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது நல வாரிய அட்டை கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணை–யர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






