என் மலர்
உள்ளூர் செய்திகள்

சீரடி மதுரம் சாய்பாபா கோவில் வருடாபிஷேக விழா
- சீரடி மதுரம் சாய்பாபா கோவில் வருடாபிஷேக விழா நாளை நடைபெறுகிறது.
- பாபா ஊர்வலம் துவங்குகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் 8ம் ஆண்டு வருடாபபிஷேக விழா நாளை (22ம்தேதி) நடைபெறுகிறது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தீரன் நகர் எதிர்புறம் அமைந்துள்ள ஸ்ரீசீரடி மதுரம் சாய்பாபா கோயில் மற்றும் தியான மண்டபம் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இதன் 8ம் ஆண்டு வருடாபபிஷேக விழா நாளை (22ம்தேதி) நடைபெறுகிறது.
இவ்விழாவையொட்டி நாளை காலை 9.15மணியளவில் மகாகணபதிஹோமத்துடன் பூஜை பூர்வாங்க பணிகள் துவங்குகிறது. இதை தொடர்ந்து 11மணியளவில் மகாதீபாரணையும், அலங்காரம் மற்றும் மதிய ஆரத்தியும் நடைபெறுகிறது. மாலை 3 மணியளவில் பெரம்பலூர் சிவன் கோயிலிருந்து முளைப்பயிர், பால்குடம் மற்றும் பாபா ஊர்வலம் துவங்குகிறது.
ஊர்வலத்தை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தொடங்கிவைக்கிறார். ஊர்வலம் கடைவீதி, பாலக்கரை, கலெக்டர் அலுவலக சாலை வழியாக கோயிலை அடைகிறது. பின்னர் மாலை 6 மணியளவில் சாய்பாபாவிற்கு பால், பண்ணீர் அபிஷேகம், புஷ்ப அபிஷேகமும் நடைபெறுகிறது.
தொடர்ந்த இரவு 7 மணியளவில் மகாதீபாரணை நடைபெறுகிறது. நாளை நாள்முழுவதும் அன்னதானம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் ரெங்கராஜ், தலைவர் கலியபெருமாள், செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜயா மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்துள்ளனர்.






