search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா , நாளை நடக்கிறது-கலெக்டர்  ஸ்ரீவெங்கடபிரியா தகவல்
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா , நாளை நடக்கிறது-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல்

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
    • சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வங்கி கடன் மேளா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் அரங்கில் நடைபெறவுள்ளது.

    மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வருகிற 25-ந்தேதி மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. வங்கி கடன் கோரும் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை உரிய விண்ணப்பத்தில் குறிப்பிட்டு சான்றுகளுடன் நேரில் அளிக்கலாம்.

    மேலும், 18 வயது முதல் 50 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் வங்கி கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் பரிசீலிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் வங்கிகடன் வழங்க ஆவன செய்யப்படும். வேலை வாய்ப்பு கோரும் மாற்றுத்திறனாளிகள் உரிய அசல் சான்றுகளுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×