என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
    X

    ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

    • ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • 16 வகையான திரவியங்களால் நடைபெற்றது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் வேதநாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. சனிக்கிழமையையொட்டி நேற்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஆஞ்சநேயருக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு 108 வடைமாலை, வெற்றிலை மாலை மற்றும் பூ அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாலையூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×