என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா
- நாளை நடைபெறுகிறது
- சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா நடைபெற உள்ளது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 30 மணிக்கு பள்ளியின் வளாகத்தில் நடைபெற உள்ளது என பள்ளி தாளாளர் பி. முருகேசன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்புலியூரில் மிகச் சிறப்பாக கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று 100சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர்.இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டாக்டர்கள் கார்த்திக் ராஜா , ராதிகா ஜெகதீஸ்வரி, செல்வமணிகண்டன், நிரஞ்சன், இந்தியன் வங்கியின் உதவி மேலாளர் இன்ஜினியர் ராம்குமார், திருச்சூரில் கனரா வங்கியின் உதவி மேலாளராக பணிபுரியும் சினேகா பொய்யாமொ ழியு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.மேலும் 2021 -2022 கல்வி ஆண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி நிசாந்தி பெயரில் நிஷாந்தி பிளாக் என்று பெயரிட்டவளாகத்தை மாணவி கையால் திறந்து வைத்து சிறப்பிக்க உள்ளார்.இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். பள்ளியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஆசிரியர்கள் ஒன்பது நபர்களுக்கு ஹீரோ ஸ்கூட்டி வழங்கப்படும் .நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் பி முருகேசன், நிறுவனர் பரமசிவம், முதல்வர் உமா மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.இவ்விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோ ர்கள்கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்