என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி உண்ணாவிரதம்
    X

    கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி உண்ணாவிரதம்

    • கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி உண்ணாவிரதம் நடைபெற்றது.
    • சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மரவநத்தம் அம்பேத்கர் தெருவில் கழிவுநீர் கால்வாய் சரியாக அமைத்து தராததால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியது. இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். கால்வாய் அமைக்கும் பணி தொடங்காததால் நேற்று பொதுமக்கள் ஒன்று திரண்டு மரவநத்தம் கிராமத்தின் பஸ் நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் மற்றும் வி.களத்தூர் போலீசார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்து இந்தப்பணி ஒரு மாதத்தில் நிறைவடையும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


    Next Story
    ×