என் மலர்
உள்ளூர் செய்திகள்

குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 21-ந்தேதி பொது ஏலம்
- குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 21-ந்தேதி பொது ஏலம் விடப்படுகிறது.
- அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 101 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா ஏலம் விட அனுமதி வழங்கியதின் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில்,
தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரால் பொது ஏலம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. வாகனங்களை வருகிற 20-ந்தேதி வரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேரில் பார்வையிடலாம் என பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தெரிவித்துள்ளார்.
Next Story






