என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின்  மேற்கூரையை பிரித்து நகை கொள்ளை
    X

    வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை கொள்ளை

    • ரத்தினசாமி வீட்டை பூட்டிவிட்டு மேல கடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம், 2 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கடம்பூரை சேர்ந்தவர் ரத்தினசாமி(வயது 67). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு மேல கடம்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது, நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

    இதையடுத்து வீட்டின் மேற்கூரை ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.70 ஆயிரம், 2 பவுன் நகைகள் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்துள்ளது.

    இது குறித்து ரத்தினசாமி அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் ஓட்டை பிரித்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×