search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் பூட்டை உடைத்து மாரியம்மன் கழுத்தில் நகைகள்-உண்டியல் கொள்ளை
    X

    கோவில் பூட்டை உடைத்து மாரியம்மன் கழுத்தில் நகைகள்-உண்டியல் கொள்ளை

    • கோவில் பூட்டை உடைத்து மாரியம்மன் கழுத்தில் நகைகள்-உண்டியல் கொள்ளையடித்துள்ளனர்.
    • நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிகரம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் இந்திரா நகரில் பிரசித்தி பெற்ற பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஈச்சம்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். பலர் குலதெய்வமாகவும் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக அதே ஊரைச்சேர்ந்த இளையராஜா (வயது 43) என்பவர் இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியில் கோவிலில் மின் விளக்கை எரிய விட்டு விட்டு பின்னர் கோவிலை பூட்டிவிட்டு இளையராஜா வீட்டுக்கு சென்றார்.

    இன்று அதிகாலையில் 5.30 மணி அளவில் அந்த வழியாக கோவிந்தராஜ் (46) சென்றார். அப்போது மாரியம்மன் கோவில் கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கோவில் திறந்து கிடந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக இதுபற்றி அவர் தர்மகர்த்தா இளையராஜாவுக்கு தகவல் தெரிவித்தார்.

    தர்மகர்த்தா இளையராஜா வந்து பார்த்தபோது கோவிலின் கிரில் கேட்ைட மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்ததை அறிந்தார். மேலும் மரக்கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த சாமி சிலையின் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த தாலி, பொட்டு, செயின் உள்ளிட்ட 2 பவுன் நகைகள் மற்றும் கோவிலுக்கு வெளியே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து இளையராஜா பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

    Next Story
    ×