search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்லாற்றில் பாலம் அமைக்க தீர்மானம்
    X

    கல்லாற்றில் பாலம் அமைக்க தீர்மானம்

    • கல்லாற்றில் பாலம் அமைக்க வேண்டும் என்று ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • அக்னி பாத் எனும் திட்டத்தை கைவிடவேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் ம.தி.மு.க. கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், எம்எல்வுமான சின்னப்பா தலைமையில் நடந்தது. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ரோவர் வரதராஜன், துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறுப்பினர் சேர்க்கை மேற்பார்வையாளரும், தேர்தல் பணிக்குழு துணை செயலாளருமான செந்தில் சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி, சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் பொருட்டு தமிழக அரசின் சட்டப்போராட்டத்திற்கு மதிமுக தொடர்ந்து ஆதரவு அளிப்பது,

    அக்னி பாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும், உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல், இயற்கை சூழலை சீரழித்து வரும் சீமை கருவேல மரங்களை அகற்றி மண் வளத்தை காத்திட வேண்டும், அகரம்- தைக்கால் இடையே உள்ள கல்லாற்றில் பாலம் அமைக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் பேரளி சரவணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×