என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
    X

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது
    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்றது

    பெரம்பலூர்:

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பெரம்பலூர் மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், பத்மாவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அண்ணாவு, புஷ்பாமேரி மற்றும் ஓய்வு பிரிவு மாவட்டசெயலாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை ச்செய லாளரும், மாவட்ட செயலாளரு மான ராஜே ந்திரன் சிறப்புரை யாற்றினார்.

    இதில் கற்பித்தல் அல்லாத பிறபணிகளுக்கு ஆசிரியர் களை ஈடுபடுத்துவதால் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளில் ஏற்படக் கூடிய இடர்பாடுகள், விதிகளுக்குப் புறம்பாக நடைபெற்று வரும் மாவட்ட மாறுதல்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

    கூட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான மாறுதல் கலந்தாய்வில், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தாய் ஒன்றியத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர்களை பணிநிரவல் என்ற பெயரில் வேறு ஒன்றியங்களுக்கு மாறுதல் செய்துவிட்டு, தற்போது தாய் ஒன்றியத்தில் காலிப்பணியிடம் ஏற்படும்போது பணி நிரவல் பெற்றவர்களை மீளப்பணியமர்த்தாமல், வேறு மாவட்டங்களில் பணியாற்றிவந்த ஆசிரியர்களுக்கு, விதி களுக்குப் புறம்பாக பெரம்பலூர் மாவட்டத்திற்கு மாறுதல் வழங்க ப்பட்டுள்ளதைச் சரிசெய்திட வேண்டும். இக்கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கடிதம் அனுப்புவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×