search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொது தேர்வில் பெரம்பலூர் தனலட்சுமி பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொது தேர்வில் பெரம்பலூர் தனலட்சுமி பள்ளி மாணவர்கள் சாதனை

    • பெரம்பலூர் தனலட்சுமிசீனி வாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர்.
    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

    பெரம்பலூர்:

    பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த 20-ந் தேதி வெளியிடப்பட்டன.

    இதில் பெரம்பலூர் தனலட்சுமிசீனி வாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவமாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனர். இப் பள்ளிமாணவிகள் ஜி.கோமதி 600-க்கு 586 மதிப்பெண்களும், லாராஸ்ரீ 569 மதிப்பெண்களும், தர்ஷினி 567 மதிப் பெண்க–ளும் பெற்று சாதனை படைத்தனர்.

    திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்கு லேசன் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளான கேசவராஜ் 600-க்கு 584 மதிப்பெண்களும் கவிப்பிரியா 573 மதிப்பெ–ண்களும், உதயபிரகாஷ் 571 மதிப்பெண்களும் பெற்றனர். பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரவிந்தன் 600-க்கு 583 மதிப் பெண்களும், பிரவீன் 568 மதிப்பெண்களும், கார்த்திகா 559 மதிப்பெண்களும் பெற்றனர்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் யாழினி 500-க்கு 483 மதிப்பெண்களும், கனிஷா பாக்கியலட்சுமி 479 மதிப்பெண்களும், தர்ஷினி 478 மதிப்பெண்களும் பெற்றனர். திருச்சி தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்கு–லேசன் மேல்நிலைப்பள்ளி மாணவிகளான ஆதர்ஷனா 500-க்கு 488 மதிப்பெண்களும், லட்சனா 485 மதிப்பெண்களும், சுபஸ்ரீ 469 மதிப்பெண்களும் பெற்றனர்.

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி மாணவிகளான புவனா 500-க்கு 466 மதிப் பெண்களும், நிஷா 463 மதிப்பெண்களும், பிருந்தா 460 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர். இதையடுத்து, சாதனை படைத்த மாணவ-மாணவிகள் மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கி பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.

    Next Story
    ×