என் மலர்
உள்ளூர் செய்திகள்

பனை விதை நடும் நிகழ்ச்சி
- பனை விதை நடும் நிகழ்ச்சி நடந்தது
- வாய்க்கால் மதகு பகுதிகளில் நடப்பட்டது
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவாடி கிராமத்தில் காமராசர் கல்வி குழுவினர் மற்றும் பள்ளி மாணவர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து கொள்ளிடம் ஆற்றில் இருந்து கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் என்றழைக்கப்படும் பொன்னேரிக்கு செல்லும் வாய்க்கால் கரை பகுதிகளில் சுமார் 1000 பண்ணை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காமராசர் கல்வி குழுவினர் அருள் தலைமையில் ஆனந்தகுமார், மணிகண்டன், முல்லை வேந்தன், பாலமுருகன். மற்றும் குணா ஆகியோர் முன்னிலையில் பகுதிகளிலும், பொன்னேரிக்கு செல்லும் வாய்க்கால் மதகு பகுதிகளிலும் சுமார் 1000 பனை விதைகள் நடப்பட்டது.
Next Story






