என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியைகளுக்கான  ஒரு நாள் பயிற்சி
    X

    ஆசிரியைகளுக்கான ஒரு நாள் பயிற்சி

    • பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடந்தது
    • 300 பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அண்ணாதுரை பயிற்சியை தொடங்கி வைத்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினார். மாவட்ட பயிற்சி மருத்துவர் விவேகானந்தன் பெண் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் பொது நலம் குறித்து பேசினார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பெண் குழந்தைகள் குறித்த பாலியல் குற்றம் மற்றும் பொது குற்றம் தொடர்பாக பேசினார்.இந்தோ அறக்கட்டளை அலுவலர்கள் ரெஜினா, சுதா ஆகியோர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், எந்த வகையில் எல்லாம் பிரச்சனை வரும் என்ற தலைப்பில் பேசினர். மாவட்ட சமுக நலத்துறை அலுவலர்கள் கீதா, பிரேமா ஆகியோர் பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இலவச உதவி எண் 181 , 1098 மற்றும் 14417 ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினர். அங்கன்வாடி மேற்பார்வையாளர் அமுதராணி பெண் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாராம் குறித்து விளக்கமளித்தார்.வட்டார மேற்பார்வையாளர்கள் சுதா, வஹிதா பானு, பன்னீர்செல்வம், ஆசிரிய பயிற்றுநர்கள் தாமரைச்செல்வி, பொன்மலர் ஆகியோர் கருத்தாளாராக செயல்பட்டனர். பயிற்சியின் முடிவில் பயிற்சியின் போது அதிக பெண் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளியில் அதிகளவில் பெண் குழந்தைகளை சேர்ந்த தலைம ையாசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது. பயிற்சியில் மாவட்டத்தில் பணிபுரியும் 300 பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள் சம்மனசு மேரி, அம்சவள்ளி , அருண்குமார் , வினோத் குமார் மற்றும் சின்னசாமி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி வரவேற்றார். முடிவில் வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார்.

    Next Story
    ×