என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

    • மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
    • விபத்தில் பலத்த காயமடைந்த பிச்சை பிள்ளை, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அழகிரிபாளையம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி பார்வதி(வயது 80). இவர் நேற்று அரியலூர் சென்று விட்டு இரவில் வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் பயணம் செய்து மருதையான் கோவில் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பின்னர் அழகிரிபாளையத்திற்கு நடந்து சென்றபோது அரியலூரில் இருந்து பெரியம்மா பாளையம் செல்வதற்காக பிச்சை பிள்ளை(47) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பார்வதி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பார்வதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பிச்சை பிள்ளை, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


    Next Story
    ×