என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் புதிய பணி
    X

    வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் புதிய பணி

    • வேலையிழந்த மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு
    • 18-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்

    பெரம்பலூர்:

    தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் கடந்த 8.11.2011 அன்று வேலையிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களை அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வேலை உறுதித்திட்ட பணி ஒருங்கிணைப்பாளர்களாக பணிபுரிய வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இப்பணிக்கென மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்ட நிதியில் இருந்து ரூ.5 ஆயிரமும், கூடுதலாக கிராம ஊராட்சிப் பணிகளுக்காக ரூ.2 ஆயிரத்து 500-ம் என ஆக மொத்தம் ரூ.7 ஆயிரத்து 500 மாதம் ஒன்றுக்கு ஒட்டுமொத்த தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 8.11.2011 அன்று வேலையிழந்த முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் தற்போது இப்பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் தங்களது விருப்ப கடிதம் மற்றும் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை சமர்ப்பித்து பணியில் சேருமாறு ஒன்றியங்களிலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) நேரடியாக தொடர்பு கொண்டு,

    தாங்கள் ஏற்கனவே பணியாற்றிய விவரத்துடன், தற்போது வழங்கப்படவுள்ள பணியில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அதற்கான விண்ணப்பத்தையும், விருப்ப கடிதத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (கிராம ஊராட்சி) நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதிக்குள் வழங்க வேண்டும்.

    அவ்வாறு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவிப்பவர்களது விருப்ப கடிதம் பரிசீலிக்கப்பட்டு வருகிற 1-ந்தேதி முதல் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். தாமதமாக வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. எனவே, குறித்த காலத்தில் விண்ணப்பித்து இப்பணி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×