search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயமான குழந்தை குளத்தில் பிணமாக மீட்பு
    X

    மாயமான குழந்தை குளத்தில் பிணமாக மீட்பு

    • மாயமான குழந்தை குளத்தில் பிணமாக மீட்டனர்
    • பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் - இளமுகை தம்பதியினரின் ஒன்றை வயது ஆகாஷ் என்கிற ஆண் குழந்தை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போனது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உறவினர்கள் தேடி உள்ளனர். இருப்பினும் குழந்தையை காணாததால் குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த குன்னம் போலீசார் அக்கம் பக்கத்தில் உள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட இடங்களில் தேடி உள்ளனர். இந்நிலையில் பிரபாகரன் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தில் தேடிய போலீசார், குழந்தை இறந்து கிடந்ததை பார்த்தனர். இதனைத் தொடர்ந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×