search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூரில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம்
    X

    பெரம்பலூரில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம்

    • பெரம்பலூரில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் மற்றும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • தலைவர்கள் ஆனந்த், சதாசிவம், சுகன்யா, கருப்பையா, மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை தலைவர்‌ பெரியசாமி மற்றும் சதானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் மற்றும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்தியா ஸ்தூபி நினைவு சின்னம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு சாசன தலைவரும், மாவட்ட தலைவருமான ராஜாராம் இறந்த ராணுவ வீரர் சரணவனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் சங்க தலைவர் ரவி, செயலாளர்கள் வேல்முருகன், விக்னேஷ், பொருளாளர் கலைவாணன், முன்னாள் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதே போல் பெரம்பலூர் லயன்ஸ் கிளப் மற்றும் மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் தலைவர்கள் ஆனந்த், சதாசிவம், சுகன்யா, கருப்பையா, மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை தலைவர்‌ பெரியசாமி மற்றும் சதானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×