என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம்
- பெரம்பலூரில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் மற்றும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- தலைவர்கள் ஆனந்த், சதாசிவம், சுகன்யா, கருப்பையா, மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை தலைவர் பெரியசாமி மற்றும் சதானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் மற்றும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்தியா ஸ்தூபி நினைவு சின்னம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு சாசன தலைவரும், மாவட்ட தலைவருமான ராஜாராம் இறந்த ராணுவ வீரர் சரணவனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் ரவி, செயலாளர்கள் வேல்முருகன், விக்னேஷ், பொருளாளர் கலைவாணன், முன்னாள் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் பெரம்பலூர் லயன்ஸ் கிளப் மற்றும் மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் தலைவர்கள் ஆனந்த், சதாசிவம், சுகன்யா, கருப்பையா, மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை தலைவர் பெரியசாமி மற்றும் சதானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்