search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்
    X

    மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

    • மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தப்பட்டது.
    • மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சாமி இளங்கோவன், மாவட்ட பொதுசெயலாளர்கள் முத்தமிழ்செல்வன், ராமச்சந்திரன், பொருளாளர் பாலமுருகன் உட்பட பலர் பேசினர். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சிகவிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் பெரம்பலூர் நகராட்சியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாவட்டத்தில் சின்ன வெங்காயம் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும், தி.மு.க. அரசின் தேர்தல் வாக்குறுதியான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4,000 வழங்க வேண்டும்.

    பெரம்பலூரில் பாரத பிரதமரின் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை கண்டறிந்து, உரிய விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ெரயில் பாதை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

    பெரம்பலூர் நகரில் பார்க்கிங் வசதியில்லாத வணிக வளாகங்களை முறைப்படுத்த வேண்டும், தனியார் டயர் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் கழிவு நீரால் பாதிக்கப்படும் நிலத்தடி நீரை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளின் நலன் கருதி மஞ்சள் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் வரவேற்றார். நகர மண்டல தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×