search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல்
    X

    பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல்

    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படு த்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறினார்.பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசியதாவது:-

    மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்து செல்வதையும், பிற வாகனங்களில் எடுத்து செல்லாமல் இருப்பதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து, அதன் பிறகு தங்கள் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்.

    மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுவதோ மற்றும் பொதுக்கழிவுகளுடன் கலந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் அரியலூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை 8220051372 என்ற செல்போன் எண்ணிலும், deeary@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×