என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
- மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 25) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவசக்தி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராமசாமி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






