என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகன விபத்தில் விவசாயி பலி
    X

    வாகன விபத்தில் விவசாயி பலி

    • வாகன விபத்தில் விவசாயி பலியானார்
    • மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45) விவசாயி. இவர் நேற்று மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணாபுரம் சென்றுவிட்டு பின்னர் பாண்டகப்பாடி நோக்கி சென்றார். அப்போது நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் கிருஷ்ணாபுரம் நோக்கி மொப்பட்டில் வந்து கொண்டிருந்தார். கிருஷ்ணாபுரத்திகு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் மோதிக்கொண்டன். இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கனகராஜுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×