என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டையால் மகனை தாக்கிய விவசாயி கைது
    X

    கட்டையால் மகனை தாக்கிய விவசாயி கைது

    • மகனை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்
    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 57), விவசாயி. இவர் அவ்வப்போது மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

    இதனை அவரது மகன் ரமேஷ் (22) தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜா தனது மகனை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


    Next Story
    ×