என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி முதியவர் சாவு
- மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழந்தார்
- வேலியை அகற்ற முயன்றபோது சம்பவம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஆருகேயுள்ள குரும்பலூர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் அே பகுதியிலுள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சின்ன வெங்காம் சாகுபடி செய்துள்ளார். இப்பயிர்களை மான், காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வந்ததால் வயலை சுற்றி மின் வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் வயலை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை அகற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






