என் மலர்
உள்ளூர் செய்திகள்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
- அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்
- இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னம் :
நாமக்கல் மாவட்டம் கோடி நாயக்கன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 62). கூலித் தொழிலாளியான இவர், பெரம்பலூருக்கு வேலைக்காக சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று மாலை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வாலிகண்ட புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அடையாளம் ெதரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பொன்னுசாமி, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






