என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம்
- ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் குபேர ஹோமம் நடந்தது
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் குபேரனின் ஜென்ம நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தன்று மகா குபேர ஹோமம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி பூரட்டாதி நட்சத்திரத்தையொட்டி மகா குபேரனுக்கு ஹோமமும், சிறப்பு வழிபாடு விமரிசையாக நடந்தது. சுவாமிக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தீபாராதனையும். குபேர ஹோமமும் நடத்தது. பின்னர் சித்ரலேகா சமேத மகா குபேரனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் செட்டிகுளம் சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






