என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
    X

    தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

    • தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • தொழிலாளர் உதவி ஆணையர் அறிவிப்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொழில் நல்லுறவு விருது பெற விண்ணப்பிக்க வேலை அளிப்பவர், தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து தொழிலாளர் உதவி ஆணையர் மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் விவரம் வருமாறு:- பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் வேலை அளிப்பவர்கள் மற்றும் ெதாழிலாளர்கள் இடையே தொழில் அமைதியையும் நல்ல தொழில் உறவையும் பேணிப்பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு ெதாழில் நல்லுறவு பரிசுத்திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நல்ல தொழில் உறவை பேணிப் பாதுகாக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும். இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் http/www.labour.tn.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    Next Story
    ×