search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் அருகே கிணற்றில் வாலிபர் பிணம்
    X

    பெரம்பலூர் அருகே கிணற்றில் வாலிபர் பிணம்

    • பெரம்பலூர் அருகே வாலிபர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே எசனை தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் கமலக்கண்ணன் (வயது 25). இவர் அதே பகுதியில் மின்வாரிய ஊழியர்களுடன் தினக்கூலிக்கு வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் கமலக்கண்ணன் வெளியூர் சென்று வருவதாக தனது தாயார் ராணியிடம் கூறி விட்டு சென்றார். இந்தநிலையில் நேற்று காலை எசனை காட்டு மாரியம்மன் கோவில் பின்புறம் கீழக்கரையில் உள்ள கிணற்றில் கமலக்கண்ணன் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் கமலக்கண்ணன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து கமலக்கண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து கமலக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கமலக்கண்ணனை யாரேனும் அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கமலக்கண்ணனுக்கு நீச்சல் தெரியாது என்பதும், அவர் வீட்டிற்கு ஒரே மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    Next Story
    ×