என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய கட்டிட கட்டுமான பணிக்கான பூமி பூஜை
- பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
- ரூ.3.40 கோடியில் கட்டுமானம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி 3 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இக்கட்டிடத்திற்கு கடந்த நவ.29-ம்தேதி அரியலூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பழைய கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. அங்கு புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story