search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி
    X

    கட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பலி

    • இவர்களுடைய 6 மாத பெண் குழந்தை கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது.
    • இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பச்சிளம் குழந்தையை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரையை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 36). இவருடைய மனைவி மேகலா (29). இவர்களுடைய 6 மாத பெண் குழந்தை கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பச்சிளம் குழந்தையை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×