என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.பெரம்பலூர் சங்குப்பேட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் நடந்த கூட்டத்திற்கு ஏரி பாசன சங்க தலைவர் கண்ணப்பிரான், நகராட்சி துணை தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எஸ்பி ஷ்யாம்ளாதேவி தலைமை வகித்து பேசுகையில், குற்றவழக்கில் சம்மந்தப்பட்ட நபர்கள் மீண்டும் குற்ற வழக்குகளில் ஈடுடாமல் இருப்பதால் எற்படும் நன்மைகள் குறித்தும், அவர்களது குடும்பத்தினரின் எதிர்காலம், அவர்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்தும், குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களுக்கு பெண் பிள்ளைகள் இருப்பின் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள சலுகைகள் மற்றும் கல்விக்கான வழிமுறைகள் , பெண் பிள்ளைகளின் முன்னேற்றம் குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும் அப்பகுதியில் வசிக்கும் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் காவல்துறையில் பணியாற்ற விருப்பப்ப டின் அவர்களுக்கு காவ ல்துறையில் சேருவத ற்கான தக்க பயிற்சி வழங்கப்படும், மேலும் சிறுவர் மன்றம் அமைத்து சிறுவர்களின் தனிப்பட்ட திறமைகளை வளர்க்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும், வேலையில்லாத இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும் தற்போது தங்களது வாழ்க்கையில் எத்தகைய இடர்பாடுகளை சந்திக்கிறார்கள் என்பது குறித்து கலந்துரையாடினார். பின்னர் இனிமேல் குற்ற வழக்குகளில் ஈடுபடமா ட்டோம் என உறுதி மொழி ஏற்றனர்.கூட்டத்தில் ஏடிஎஸ்பி மதியழகன், டிஎஸ்பி பழனிச்சாமி, வளவன், மதுமதி (பயிற்சி), இன்ஸ்பெ க்டர் முருகேசன் மற்றும் எஸ்ஐக்கள், போலீசார் கலந்துகொண்டனர்.






