என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரில் நடைபெற்றது
- ஒன்றிய செயலாளர் கர்ணன் படிவத்தை கொடுத்து தொடங்கி வைத்தார்
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக தீவிர உறுப்பினர்கள் சேர்க்கைக்கான ஆலோசனைக் கூட்டம் கொளக்காநத்தத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமையில் வழங்கப்பட்டது.புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்வில் ஒன்றிய அவைத் தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஆலத்தூர் சேர்மன் வெண்ணிலா, மாவட்ட பாசறை செயலாளர் இளஞ்செழியன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜா, ஒன்றிய துணை சேர்மன் சுசீலா, ஒன்றிய பேரவை செயலாளர் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பழனிமுத்து, ஒன்றிய இளைஞரணி நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் மோகன் கண்ணன், கெளக்காநத்தம் நிர்வாகிகள் துரைராஜ், கதிர்வேல், இளங்கோவன், வக்கீல் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






