என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்போனில் பேசி வாலிபரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி
    X

    செல்போனில் பேசி வாலிபரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி

    • செல்போனில் பேசி வாலிபரிடம் ரூ.6.34 லட்சம் மோசடி செய்யப்பட்டது
    • வட மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறை கிராமத்தைச் செர்ந்தவர் ராஜா மகன் அனந்தகுமார். இவருக்கு 15.7.2021 அன்று செல்போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் ஆன்லைன் மூலம் 6.8.2020 அன்று வாங்கிய ஸ்மார்ட் வாட்சுக்கு மஹிந்திரா எஸ்.யூ.வி கார் பரிசு விழுதுள்ளது. அந்த காரை பெற்றுகொள்ள வரி செலுத்த வேண்டும். அதற்கான தொகை ரூ.6 லட்சத்து 34 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறி வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளனர்.

    அனந்தகுமாரும் அவர்கள் கூறியதை நம்பி, பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், ஓராண்டாகியும் பரிசு விழுந்ததாக கூறப்பட்ட கார் அனந்தகுமாருக்கு வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனந்தகுமார் இதுகுறித்து பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இது குறித்த புகாரி ன் பேரில் பெரம்பலூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மொபைல் எண், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வைத்து மோசடி செய்த நபர்களை அடையாளம் கண்டனர். இதையடுத்து டெல்லி சென்ற தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்ட உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், பிம் நகர் பகுதியைச் சேர்ந்த குல்சிராம் மகன் கிஷான் (வயது 32), காசியாபாத், விஜய நகர் ராம் கெலவன் மகன் ரோஹித் பால்(29), ஹரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம், ஆர்யா நகரைச் சேர்ந்த ஸ்ரீ நிவாஸ் பன்சால் மகன் அங்கித் பன்சால் (30) ஆகிய 3 பேரை கைது செய்து நேற்று பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×